என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Thursday 22 October 2015

நரக மீன் விடை தெரியாத மர்மங்கள்?


                                                             நரக மீன்

  2008ம் ஆண்டு நியூயார்க்கின் மான்டெக் நகர கடற்கரையில் ஒதுங்கிய ஒரு உயிரற்ற உடல் அக்காலக்கட்டத்தில் மீடியாக்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் இது ஒரு ராக்கூன் என்றும், இதுவொரு நாய் என்றும், ஆடு என்றும், கடல் ஆமை என்றும் விதவிதமான முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும்கூட அது எல்லாவற்றையும் பல், உடல் அமைப்பு, கால்களின் நீளம் என்று ஒவ்வொரு காரணிகளின் அடிப்படையில் மறுத்த ஆதாரப்பூர்வ அறிவியல் கூற்றுகளும் நிறைந்திருக்கிறது.



   மொத்தத்தில் கரை ஒதுங்கிய இந்த உயிரற்ற உடல் Montauk Monster என்ற பெயரில் ஒரு ஆச்சர்யமான விவாதப்பொருளாகவே மனிதர்களிடையே பரவியிருக்கிறது.


   நரக மீன் என்று அழைக்கப்படும் இந்தப்படம்கூட கரை ஒதுங்கிய உயிரினமாகவே பல தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இது கரை ஒதுங்கிய இடம் மற்றும் மேலதிக தகவல்கள் எங்கும் இல்லை. இருந்தாலும்கூட இந்தப்படம் உணர்த்தும் அமானுஷ்யம் மனிதர்களுக்கு எப்போதும் சுவாரஷ்யம்தான். மேலும் இந்த Montauk Monster தகவல்களுக்கு இங்கே சுட்டவும்.

Thursday 15 October 2015

லிப்ஸ்டிக் உருவான வரலாறு.

உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான்.



   மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை 
கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள்.

Wednesday 14 October 2015

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.


Tuesday 13 October 2015

Sunday 27 September 2015

33 ஆண்டுக்கு பிறகு அரிய கிரகணம் வானில் இன்று ரத்த நிலா தோன்றும்.

  33 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் ரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Friday 25 September 2015

விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?

 
  விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா  என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு  படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே  பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். 

Thursday 24 September 2015

விடைதெரியா மர்மங்கள் புனித உடற்போர்வை (Shroud of Turin)

 யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம்  என்றனர். 


Wednesday 23 September 2015

இல்லை... இல்லை... இல்லவே... இல்லை...


1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை
2. அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை
5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை
10.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை
21. நண்டுக்குத் தலை இல்லை
22. ஆமைக்கு பற்கள் இல்லை
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை
25. பாம்புக்கு காது இல்லை

Tuesday 22 September 2015

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு யுனெஸ்கோ முக்கியத்துவம் வழங்கியது ஏன்?

 தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு அரணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஆனைமலை சிகரம்

Monday 21 September 2015

அது என்ன ஹிக்ஸ் போஸான்?

 ஹிக்ஸ் போஸான்: கடவுளைக் (கிட்டத்தட்ட) கண்ட விஞ்ஞானிகள்!
உலகம் எனும் இந்த பூமி, சூரியன், ஆகாய வெளி, அதில் தெரியும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களுக்கும் அப்பால் கோடி கோடி மர்மங்களை உள்ளடக்கி இயங்கும் அண்ட சராசரங்களை எல்லாம் உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?
 இன்று நேற்றல்ல… பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. ஆணித்தரமான பதில் கிடைக்காத நேரத்தில், நம்மை மீறிய சக்தி… என்ற பொதுவான சமாதானத்துடன் மனிதன் வாழ்க்கையைக் கடந்து போனான்.
 ஆனால் ஒரு தலைமுறை அப்படி சமாதானமடைந்தாலும் அடுத்த தலைமுறை சும்மா இருப்பதில்லையே…
 இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பிரபஞ்ச உருவாக்கம் குறித்த ஆய்வுகள் தொடங்கிவிட்டன.

Tuesday 18 August 2015

நாமே மிகப்பெரிய அதிசயம். நம்மை பற்றிய பொது அறிவு தகவல்கள்.


நாம் இந்த உலகில்
எத்தனையோ விசயங்களை அறிறோம் ,
பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம் ,
நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம்
என்பதை நம்மை நாம்
நோக்கினால் அறியப் பெறுவோம் . 


Thursday 6 August 2015

இதுவரை பார்த்திராத நிலவின் இன்னொரு முகம்: நாசா செயற்கைக் கோள் படம்பிடித்தது.

 பூமியில் இருந்து பார்க்கவே முடியாத, நிலவின் இன்னொரு பக்கத்தை, நாசா அனுப்பிய செயற்கைக் கோள் மிக அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது.

Tuesday 4 August 2015

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஏன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது தெரியுமா?

 நிலத்துக்கு அடியில் சில முக்கியமான படலங்கள் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருக்கிறது. ஐரோப்பிய நிலத்தடிப் படலமும், ஆப்ரிக்க நிலத்தடிப் படலமும் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருப்பதால், அங்கு எரிமலைகளும், நில நடுக்கங்களும் அவ்வப்போது தோன்றுகின்றன. எப்போது எந்தவிதமான இயற்கைப் பேரழிவு நடைபெறுமோ என்ற பயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

Friday 31 July 2015

40 வகை பழங்கள் காய்க்கும் அதிசய மரம்.

 ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்களை காய்க்கச் செய்து அமெரிக்க வேளாண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

Monday 27 July 2015

கடலில் உருவான குட்டி நாடு.







 நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை; இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.

Saturday 25 July 2015

11 கோடி ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த 4 கால் பாம்பு எலும்பு கூடு கண்டுபிடிப்பு.

 சுமார் 11.3 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான பாம்பின் படிமங்கள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் அப்போதைய பாம்புகளுக்கு 4 கால்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Thursday 23 July 2015

புத்தம் புதிய பூமி: கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

 பூமி போன்று இன்னொரு கிரகம்  இருக்கிறதா என்று நீண்ட காலமாக நாசா ஆய்வு நடத்தி வந்த நிலையில் தற்போது இன்னொரு பூமியை கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்?

 இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால்
அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம்!, தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத
விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்க முடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால்
கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்!

சனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன?


சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் துகள்கள் மற்றும் பெரும் பாறைகளால் ஆன தொகுப்பு என்று சொல்லலாம். பெரும்பாலும் உறைந்த நீர் பனிக்கட்டிகள் மற்றும் பாறைத் துகள்கள் நடுவே இடைவெளிகள் இருக்கின்றன.



Wednesday 22 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி02)


பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை என்றால் வெளியே கக்கிவிட முடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செரித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். பாம்புக்குத் தெரியும் முட்டையில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன என்று. ஆகவே முட்டையின் மீது அதற்கு ஒரு விதமான ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.


Tuesday 21 July 2015

நாக மாணிக்கம் என்பது உண்மையா? தொடரும் மர்மங்கள்.! (பகுதி 01)

  நாகமாணிக்கம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பல கருத்துக்கள்
நிலவி வருகிறது. இது தொடர்பாக பொதுவாக இன்றுவரை பலராலும்
கூறப்படும் கருத்து நாகமாணிக்கம் என்பது நாக பாம்புகளால்
கக்கப்படுகின்ற ஒரு வகை கற்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும்
இது தொடர்பாக எதிர்கருத்து ஒன்றும் அறிவியலாளர்களால்
முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான அறிவியல் ரீதியாக எதுவும் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.

 நாகமாணிக்கம் என்பது தொடர்பாக உண்மைத்தன்மையை ஆராயும் பொருட்டு இது தொடர்பாக வெளியாகிய செய்தி தொகுப்புக்களுடனும் எதிர்மாறான கருத்துக்களுடனும் இந்த
செய்தி உங்களை சந்திக்கின்றது.


Sunday 19 July 2015

புளூட்டோவை அண்மித்து வரலாற்று சாதனை படைத்தது நாசாவின் நியூ ஹாரிசன்!

 அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் புளூட்டோ குள்ளக் கிரகம் அதன் சந்திரன்கள் மற்றும் கியூப்பெர் பெல்ட்டிலுள்ள பல விண்பொருட்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு பூமியில் இருந்து செலுத்தியிருந்த நியூஹாரிசன்ஸ் விண்கலம் சுமார் 9 வருடங்களாக Flyby முறை மூலம் 3 மில்லியன் மைல் தூரம் பயணித்து அண்மையில் புளூட்டோவை நெருங்கியதாகச் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
மேலும் இவ்விண்கலம் ஏற்கனவே புளூட்டோ குறித்த சில புகைப்பங்களையும் அனுப்பி இருந்தது.

வியக்க வைக்கும் செய்திகள் -50



Saturday 18 July 2015

5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பிளாட்டினம் கொண்ட விண்கல் பூமியைக் கடக்கிறது.

ஞாயிறன்று லண்டன் நேரம் இரவு 11 மணியளவில் பெரிய விண்கல் ஒன்று பூமியைக் கடந்து செல்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் திங்கள் அதிகாலை 4 மணியளவில் இண்டெர்நெட்டில் இதனை நேரலையாகக் காணலாம்.

Wednesday 8 July 2015

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை அதிசய சிவப்பு நட்சத்திரங்கள்.

பால்வெளி அண்டத்தில் மிதந்து வரும் இரட்டை சிவப்பு நட்சத்திரங்களை வானியலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடித்துள்ளனர். அதை தீவிரமாக கண்காணித்து வந்த அவர்கள் கூறியது.



Friday 3 July 2015

சூரியன் பற்றி தெரிந்துகொள்வோமா?

 பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.


சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது.

Thursday 2 July 2015

இன்டர்நெட்



இன்டர்நெட் (“internet”) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது. “ஒன்றோடொன்று இணைந்தஇணைக்கப்பட்ட செயல்பாடுகள்” என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. பின்ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல்உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது.


Wednesday 1 July 2015

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?


இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. 



  • முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.

அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...

கம்ப்யூட்டரில் உள்ள வைரசுக்கு ஏன் அந்த பெயர் வந்தது என தெரியுமா?



Frederick Cohen என்ற மாணவர், வைரஸ் (“virus,”) என்ற சொல்லை முதன் முதலில், கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமிற்குப் பயன்படுத்தினார். இவர் கலிபோர்னியா பொறியியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?


ஏன் டிவி திரை, சினிமா திரை, போன்றவை செவ்வகமாகவே இருக்கின்றன?
சதுரமாகவோ செங்குத்தாகவோ இருந்தால் என்ன என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

Tuesday 30 June 2015

Mp3 பாடல்கள் உருவாக்கப்படும் விதம்


ஆடியோ தகவல்களை அதுதான் பாடல்களை சுருக்குவதற்கு உதவும் தொழில் நுட்பம் என்ன தெரியுமா? நம் காது கேட்பதில் உள்ள குறைபாடுதான்.. பயந்து விடாதீர்கள் இது கோளாறு இல்லை. ஆனால் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி உருவான தொழில் நுட்பம்தான் MP3

Monday 29 June 2015

குடிநோய் (Alcoholism) பற்றி தெரியுமா?

 குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி,



இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். 

நித்திரையிலும் யாத்திரையிலும் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது – ஏன்?




இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறியவேண்டும்.
காந்தம், இரும்பு (Iron) தன்மை கொண்ட பொருட்களையும், காந்ததன்மை கொண்ட பொருட்களையும் தன்வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறுவயதில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம்தெரியும்.

Monday 15 June 2015

ஃபைலே ஆய்வுக்கலன் மீண்டும் 'விழித்துக் கொண்டது'

வால்நட்சத்திரம் ஒன்றின்மீது இறங்கிய முதலாவது ஆய்வுக்கலனான ஃபைலே, 7 மாதகால உறக்க நிலைக்குப் பின்னர் இப்போது மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

Friday 29 May 2015

உலகில் முதலாவதாக 4¼ லட்சம் ஆண்டுக்கு முன்பு கொல்லப்பட்டவர் மண்டை ஓடு ஸ்பெயினில் கண்டுபிடிப்பு.


மனிதர்களின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் ஸ்பெயினில் வடக்கு பகுதியில் உள்ள சிமா டிலோஸ் ஹியூசஸ் பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டவர். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த ஒரு குகைக்குள் 28 பேரின் எலும்பு கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Wednesday 27 May 2015

ஆமை சில தகவல்கள்.

 ஆமைகள் அல்லது நில ஆமைகள் என்பவை டெஸ்டியுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பெரிய மூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.



Monday 25 May 2015

பென்குயின் பற்றிய சில தகவல்கள்.

 பென்குயின்கள் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு krill, மீன், squid முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன.
Emperor Penguin


Saturday 23 May 2015

நீண்ட காலம் தூங்கும் நத்தை.

நத்தை, முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும். நிலம், நன்னீர் நிலைகள் மற்றும் கடலில் இவை வாழ்கின்றன. ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நத்தை இனங்கள் பூமியில் வாழ்கின்றன. 

ஒட்டகம் பற்றிய சில அறியாத தகவல்கள்.

 பாலைவனத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த
ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து  680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு,நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!

Wednesday 20 May 2015

பாலூட்டிகளைத் தெரியுமா?

 உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.

#

நீலத்திமிங்கலத்தை பற்றி இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள்.

 உலகிலுள்ள தாவர, விலங்கினங்கள் பல்வேறு வகையாக பட்டியலிடப்படுகின்றன. அவற்றுள் பாலுட்டிகள் என்பவை ஒரு வகை விலங்கினங்களாகும். பாலுட்டி விலங்கினங்கள் குட்டி போட்டு பால் கொடுக்கக் கூடிய குணத்தைக் கொண்டவை. மனிதன், காண்டாமிருகம் மற்றும் பலவகை நிலவாழ் பிராணிகளும், திமிங்கலம், டால்பின்கள், ஓர்க்கா முதலிய நீர்வாழ் உயிரினங்களும் பாலுட்டி வகையை சேர்ந்தவை. ஒரு வகையில் நாம் பார்த்தோமானால் திமிங்கலங்கள் நமக்கு து|ரத்து சொந்தங்களே.


உலகின் மிக பெரிய மலர் rafflesia

 இந்தோனேஷியா தீவான சுமத்ராவின் மழைக்காடுகளில் Rafflesia என்ற விசித்திரத் தாவரம் உள்ளது. இதில் தண்டுகளோ, இலைகளோ கிடையாது. ஆனால், ஒரே ஒரு பூ மட்டும் உண்டு. அதுதான் உலகின் மிகப்பெரிய மலர்!


Monday 18 May 2015

தும்மல் வருவது ஏன்?

 மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும்.
இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல்.


Friday 15 May 2015

Do Not Track - என்னைப் பின் தொடராதே.

  பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளம் சென்றாலும், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்திற்குச் சென்றாலும், அந்த கேமரா குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத்தான் “நம்மைப் பின் தொடரும் வழி” என்று இணைய மொழியில் சொல்கிறோம்

Thursday 14 May 2015

ஒரு நாள் போட்டியில் 500 ரன் வித்தியாசத்தில் வெற்றி; ஒரே வீரர் 350 ரன்கள் எடுத்தார்!.

முதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 350 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதனால் எதிரணி 500 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


Wednesday 13 May 2015

மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்.

 லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா.  பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன.  இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.  இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன், அவர்களின் முக அமைப்புகள், தலையில் அணியும் தொப்பி, மேல் அங்கி மற்றும் கைகள் ஆகியவை குறித்தும் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ இணைப்பு


கணினியில் உருவாக்கப்பட்டு உள்ள குரல் ஒன்று பேசும்போது, லியோனார்டோ டாவின்சி தனது பெரும்பாலான படைப்புகளில் ரகசிய குறியீடுகள் மற்றும் உணர்வதற்கு அரிய செய்திகளை ஒரு நோக்கத்துடனே மறைத்துள்ளார் என்றும் பெரும்பான்மையான மத வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இது உண்மை என்றால், மோன லிசா படம் உண்மையில் முக்கியமான வரலாற்று மற்றும் மத உண்மைகளை மறைக்கும் வகையில் ஓவியமாக்கப்பட்டு இருக்கலாம் என கூறுகிறது.

எனினும், அந்த வீடியோ, வேற்று கிரகசவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்களை குறித்த நம்ப கூடிய விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை.  அதனுடன் ஓவியத்திற்கு அதிக வண்ணங்களை கொடுத்து, அதனை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மெருகேற்ற வேண்டும் என்பதனையும் ஏற்று கொள்கிறது.  இது குறித்து யூ டியூப் கருத்து வெளியீட்டாளர் ஒருவர் கூறும்போது, வேற்றுகிரகவாசி சாமியாரா?  வேற்றுகிரகவாசி எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.  எனினும், சிலர் இதற்கான சாத்தியம் இருக்கிறது என கூற முன்வந்துள்ளனர்.



வேற்றுகிரக தட்டுகளை குறித்த இணையதளம் ஒன்றினை நடத்தி வரும் வேற்று கிரகவாசி கருத்தியலாளர் ஸ்காட் சி வேரிங் கூறும்போது, டா வின்சி வேற்று உலக உயிரினங்களின் உறுப்பினர் என கூறுகிறார்.  அவர் எழுதும்போது, லியோனார்டோ டா வின்சி ஒரு வேற்று கிரகவாசியாக இருப்பதற்தோ அல்லது அதில் பாதியாக இருப்பதற்கான வாய்ப்போ மிக அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அதற்கான குறியீடுகளை அவர் வெளிப்படுத்துகிறார்.  அவர் மிக அதிக அறிவாற்றல் திறன் கொண்டவர்.  அசாதாரண படைப்பாற்றல் திறன் உடையவர்.  அவற்றை பயன்படுத்தி இந்த விசயங்களை அவர் செய்து முடித்துள்ளார்.  இதுபோன்ற பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றும் திறன் கொண்டவரான லியோனார்டோ போன்று இருப்பது வழக்கத்தில் இல்லாதது.  ஜீனியஸ் ஆக இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து லியோனார்டோ போன்று இருப்பது அரிதானது.



அவரது படைப்புகளில், ரகசிய தகவல்கள் மற்றும் குறியீடுகளை மறைத்து வைப்பவர் என்பது தெரிந்ததே.  அதனால், இந்த புதிய கண்டுபிடிப்பு, அவரது அசாதாரண திறமைகள் எங்கிருந்து வந்தது அல்லது அவை வேற்று கிரகவாசிகளிடம் இருப்பது, என்பன போன்ற தெரியாத விசயத்தை அறிவதற்கான முக்கிய கரு பொருளாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.  டா வின்சியின் ஓவியங்கள் மறைக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் தகவல்களை கொண்டிருக்கிறது என்ற ஊக அடிப்படையிலான செய்திகள் உள்ளன.  தி டா வின்சி கோடு என்ற புத்தகம் மற்றும் படம் இதனடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில், மோன லிசாவின் ஓவியத்தில் அவரது கண்களில் சிறிய எண்கள் மற்றும் எழுத்துகள் இருப்பது தெரிய வந்துள்ளது என்றும் அது குறியீடுகளாகவும் இருக்க கூடும் என்றும் வரலாற்று கலைஞர்கள் கூறியுள்ளனர்.