என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday 29 May 2015

உலகில் முதலாவதாக 4¼ லட்சம் ஆண்டுக்கு முன்பு கொல்லப்பட்டவர் மண்டை ஓடு ஸ்பெயினில் கண்டுபிடிப்பு.


மனிதர்களின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் ஸ்பெயினில் வடக்கு பகுதியில் உள்ள சிமா டிலோஸ் ஹியூசஸ் பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டவர். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த ஒரு குகைக்குள் 28 பேரின் எலும்பு கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அவற்றை பரிசோதனை செய்ததில் அவர்கள் 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இறந்தவர்கள் என தெரிய வந்தது.


 அவற்றில் ஒரு மண்டை ஓட்டில் கடுமையாக தாக்கி அதன் மூலம் உயிர் பிரிந்ததற்கான அடையாளம் இருந்தது. எனவே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


 மேலும் இவரே உலகில் முதலாவதாக கொலை செய்யப்பட்டவராக இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்
.

No comments:

Post a Comment