என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Monday 25 April 2016

அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!? ஆதாரங்கள்.

  1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து என்பது தான் நிதர்சனமான உண்மை.

Saturday 23 April 2016

நிலா உடைந்து சிதறும்!

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டுகளாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Thursday 21 April 2016

வானில் நாளை நிலா சிறிய அளவில் தோன்றும் அதிசய நிகழ்வு.

  வானில் 15 வருடங்களுக்கு பின்னர் மினி மூன் என்ற நிகழ்வு நாளை ஏற்படுகிறது. பூமியை நிலவு வட்ட பாதையில் சுற்றி வருகிறது. அது பூமியை விட மிக அதிக தொலைவில் செல்லும் நிலையை அறிவியலாளர்கள் அபோகீ (apogee moon)என கூறுகின்றனர்.

Wednesday 20 April 2016

மாயமாய் மறைந்து போன தங்க புத்தர் சிலை இன்றும் விடுபடாத மர்மம்.

   லூஜான் என்ற பிலிப்பைன் தீவு (மணிலாவிற்கு தெற்கே 200 மைல் தொலைவிற்கப்பால் உள்ளது) இதில் 1970 ல் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரோஜர் ருக்ஸாஸ் (Roger Roxas). ஃபெர்டிணன்ட் மார்கோஸ் (Ferdinand Marcos )1965 முதல் 1986 வரை பிலிப்பைனை தன் கட்டுக்குள் வைத்திருந்தவர். (ஆரம்பத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னாலில்
சர்வாதிகாரியானவர்) அவரின் அப்போதைய சொத்துமதிப்பு சுமார் 10
பில்லியன் டாலர்கள் இருக்கும் என்கிறார்கள். (மே 5,1971ல்) அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்தான் ரோஜர் ரூக்ஸாஸ்.


Monday 18 April 2016

புதனுக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth என்ற கிரகம் இருந்து அழிந்து போனதா?

     பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு கால கட்டத்தில் நமது சூரிய குடும்பத்தில் இப்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே சூப்பர் பூமி (Super Earth) எனப்படும் நாம் வாழும் பூமியை ஒத்த குறைந்தது ஒரு கிரகமாவது இருந்ததாகவும் வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Sunday 17 April 2016

விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்.

  1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம்
ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513). இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த
அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர்
காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான
அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது.

Thursday 14 April 2016

நரகம்போல் காட்சியளிக்கும் புதுகிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.

  சூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்ஸோபிளான்ட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளான்ட் (exoplanet or extrasolar planet) எனப்படும். 1988-ஆம் ஆண்டு முதல் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்ட எக்ஸோபிளானட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சமீபத்திய ஆண்டுகளில் பூமி கிரகத்தை ஒற்ற எக்ஸோபிளானட்கள் தேடல் ஆனது மிகவும் வேகமான முறையில் நடந்துக் கொண்டிருக்கிறது..!


Tuesday 12 April 2016

பெருவிண்மீன் வெடிப்பின் துகள்கள் நாம்!

   சூப்பர்நோவா!

    பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான வாணவேடிக்கை! ஆனாலும், வெறுங்கண்களுக்கும் தொலைநோக்கிகளுக்கும் அந்தப் பிரம்மாண்டம் எளிதில் அகப்படாது. சூப்பர்நோவாவைப் பற்றிய இருவேறு தகவல்கள் அறிவியலாளர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சூப்பர்நோவாவைப் பற்றிப் பார்ப்போம்.

Monday 11 April 2016

உங்களுக்கு காலண்டரின் வரலாறு தெரியுமா?.

  ரோம் நாட்டை உருவாக்கியவரும் ரோமின் முதல் மன்னருமான ரோமுலஸ்க்கு (Romulus) அடுத்தபடியாக வந்தவர் இரண்டாம் அரசர் நியுமா பாம்ப்பிளியஸ்(Numa Pompilius) இவர் கொண்டுவந்தது தான் 12 மாத காலண்டர். இதற்கு முன் இருந்த காலண்டர் சந்திர காலண்டர் இதில் 10 மாதங்கள் தான் இருந்தது ஏனெனில் பண்டைய காலங்களில் சந்திரனின் சுழற்சியால் தான் இரவும் பகலும் ஏற்படுகிறது என மக்கள் நம்பினார்கள் சந்திரனின் சுழற்சியும் விவசாயம் நடக்கும் காலத்தையும் அடிப்படையாக கொண்டுதான் காலண்டர் உருவாக்கப்பட்டது. இதில் வருடத்திற்கு 304 நாட்கள் என 10 மாதங்கள் பிரிக்கப்பட்டன. அதில் 6 மாதங்களுக்கு  தலா 30 நாட்கள் மீதி 4 மாதங்களுக்கு 31  நாட்கள். விவசாயம் நடக்காத பனி காலங்கள் 2 மாதத்திற்கு நீடிக்கும் இந்த இரண்டு மாதங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளபடவே இல்லை.

Romulus

Saturday 9 April 2016

உன் தகுதியை நீயே உரக்கச் சொல் – ஜூலியஸ் சீஸர் Julius Ceasar.

  கி.மு. 75-ம் வருடம். சட்ட திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞன் ஜூலியஸ் சீஸர். எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்யளயர்களால் பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் நபைர விடுதலை செய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத் தகவல் அனுப்பினார்கள். உடனே ஸீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக் காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’’ என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள். உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார். கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடப்பிடித்து வருகிறேன்’’ என்றார் சீஸர்.


Thursday 7 April 2016

பேய் இருப்பதற்கான ஆதாரங்கள்.!?

   1825 ஆம் ஆண்டு நிலையான புகைப்படம் எடுக்கும் வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. அன்று துவங்கிய புகைப்படம் எடுக்கும் வழக்கம் கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு கட்ட வளர்ச்சிகளை கடந்து விட்டது. அன்று கருப்பு வெள்ளை நிறத்தில் துவங்கிய இந்த வழக்கம் இன்று செல்பீயில் வந்து நிற்கிறது.

இப்படி இருக்க உலகில் கடவுள் மற்றும் பேய் என்ற இரண்டு விஷயங்களும் பஞ்சாயத்தை கிளப்பும் விதமாகவே இருக்கின்றது எனலாம். ஒருபக்கம் இரண்டுமே உலகில் இருக்கு என்றும் மறுபக்கம் இது எல்லாம் பொய் என்றும் இன்று வரை இந்த குழப்பத்திற்கு தீர்வே கிடையாது என்பது மட்டுமே உண்மை.

கடவுள் மற்றும் பேய் இவைகளை நிரூபிக்கும் எவ்வித சாட்சிகளும் இதுவரை எவராலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவே இவை சார்ந்த குழப்பங்களுக்கு காரணமாக இருக்கின்றது. அந்த வகையில் உலகில் பேய் இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக உலவி வருகின்றது. அவைகளில் சிலவற்றை காண்போம்.

ஹேம்ப்டன் அரண்மனை

நீதிமன்றம் இந்த புகைப்படம் அரண்மனை பூட்டப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா மூலம் படமாக்கப்பட்டதாகும். இது எடுக்கப்பட்ட போது அப்பகுதியில் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday 6 April 2016

தொன்மையான பாக்தாத் மின்குடுவை.

  1938 ல் பாக்தாத் அருகில், இரண்டாயிரம் ஆண்டு பழமையான கிராமத்தில்
எதற்காகவோ நிலத்தை தோண்டிய பொழுது வேலையாட்களுக்கு நிலத்தினடியில் ஒரு பொருள் கிடைத்தது. அது பார்பதற்கு ஒரு பூச்சாடி அல்லது குடுவை போல இருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தில்
களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது(6 இன்ச் உயரம்). 5 க்கு 1.5 இன்சுகள் உள்ள தாமிர தகட்டால் உருளை வடிவ அடிப்பகம் கருங்காறையால் (asphalt)
பற்று வைக்கும் தொழில் நுட்பத்துடன் மூடப்பட்டு இருந்தது. இதனுள்
பொருத்தும்படியான ஒரு இரும்பு துண்டு அதன்மேல் முனை கருங்காறையால் மூடப்பட்டிருந்தது. (இப் பொருளின் காலம் : பார்தியன் காலம் 248 BCE and 226 CE, circa 250 BC to AD 225 )


Friday 1 April 2016

தங்கம் தோன்றியது எப்படி?

  உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது.


கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கோலார் (தற்போது இல்லை) என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூக்கொடை என்னுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்று மண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாக கூறப்பட்டாலும், மிக குறைந்த அளவே அங்கிருந்து கிடைக்கிறது.