என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Wednesday 28 December 2016

எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு பற்றித் தெரியுமா?

ண்டனைச் சேர்ந்த மார்ட்டின் எனப்படும் பல் மருத்துவரின் கதை மிக சுவாரஸ்யமானது. அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங் செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735-ல் இறந்துபோனார். அவரது உயிலில், ‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை... எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டு’ என எழுதி இருந்தார். மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு பல் மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார். அதனால் மனிதருக்கு கிடைத்தது டபுள் தமாக்கா! ஒரு பக்கம், இந்தக் காட்சியைப் பார்க்கவந்த மக்களால்... இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.

வில்லியம் ஹண்டர்

Monday 26 December 2016

எவ்வளவு பெருசு! - நீண்ட, நெடிய வீதி!

னிதர்களின் ‘தொலைநோக்கி’ப் பார்வையால் உற்று நோக்கப்படக்கூடிய பிரபஞ்சத்தின் அளவு சுமார் 9,300 கோடி ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. இது நமது ‘தொலைநோக்கி’ப் பார்வையின் எல்லைதான். அதைத் தாண்டியும் விரிந்திருக்கும் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை இன்னும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நம் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வீதி மண்டலம் (Milky Way Galaxy) என்பது பூமியில் நாம் இருக்கும் தெருவைப் போன்றதுதான். இன்னும் சொல்லப்போனால் நம் தெருவின் சிறு சந்துதான்.

Tuesday 29 November 2016

அணுவுக்குள் அண்டம்.

மிக நுண்ணிய பொருட்கள், விஷயங்களைப் பற்றிப் பேசும்போது நம் மொழியில் ‘அணுவளவு’, ‘இம்மியளவு’ போன்ற சொற்றொடர்கள் தவறாமல் இடம்பெறும். இப்படி சிறியவை, நுண்மை போன்றவை குறித்த உரையாடல்களில் அணு அடிப்படையாக இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தின் பருப்பொருட்கள் அனைத்துக்கும் அணு அடிப்படையாக இருந்தாலும் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். சிறியது,பெரியது என்பதையெல்லாம் எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறோம்? அணுக்கள்தான் சிறியவையா?


Sunday 27 November 2016

மீண்டும் உயிர்த்தெழும் மாமத யானைகள்

ரு காலத்தில் வாழ்ந்து அழிந்தொழிந்துபோன டைனசார் போன்ற விலங்குகளை மீண்டும் பூமியில் உயிர்த்தெழச் செய்து நடமாட வைப்பது சினிமாவில், நாவல்களில் வரும் கற்பனையாக மட்டுமே இருந்துவந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட கற்பனைகள் நிஜமாகப் போகின்றன. அதற்கான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் ஆரம்பித்துவிட்டார்கள்.


Friday 18 November 2016

நமது பூமிக்கு அருகிலேயே மற்றொரு பூமி.

மது பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டத்தில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள நட்சத்திரம் ப்ரொக்ஸிமா செண்டூரி (Proxima Centauri) ஆகும். இவ்வருடத் தொடக்கத்தில் பூமியில் இருந்து 4 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 'ப்ரொக்ஸிமா பீ' (Proxima b) என்ற கோள் பூமிக்கு ஒப்பானது என்றும் இதில் நமக்கு நிகரான உயிரினங்கள் வாழும் சாத்தியம் உள்ளது என்றும் வானியலாளர்கள் தெரிவித்து இருந்தனர்.



Wednesday 9 November 2016

நம்மைச் சுற்றி: நமது பால்வீதியின் வரைபடம்!

 ரு நாட்டின் வரைபடத்தைக்கூடத் தெளிவாக வரைய முடியாத காலம் ஒன்று இருந்தது. இந்தியப் பிரதேசங்களுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்கு முன்பு, நல்ல வரைபடம் கிடையாது. உலக வரைபடத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். எந்த நாட்டில் ‘உலக’ வரைபடம் தயாரிக்கப்பட்டதோ, அந்த நாடு பெரிதாகவும், மிகப் பெரிய கண்டங்கள்க கூட சிறு தீவுகளாகவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தன. இப்போது செயற்கைக்கோள் உதவியுடன் மிகத் துல்லியமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

பால்வீதியின் வரைபடம்

Thursday 3 November 2016

நமது சூரியமண்டலத்தில் உள்ள உண்மையான ஒன்பதாவது கோள்?

மது சூரியக் குடும்பத்தில் நெப்டியூனுக்கு அப்பால் பூமியை விடப் பத்து மடங்கு நிறை கொண்ட ஒரு புதிய கோள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள்.


நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பல வான்பொருட்களின் சுற்றுப் பாதையைக் கணினி மாதிரிகள் உருவகப்படுத்தும்போது, இப்படியொரு கோள் இருப்பது போல் தெரிந்தது என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கால்டெக் (Caltech) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இந்தக் கோளை யாரும் தொலைநோக்கியில் பார்க்கவில்லை.

Monday 31 October 2016

டைட்டானிக் பற்றி தெரியாத தகவல்கள்!!

டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் தெரியுமே தவிர நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரியும்.


Wednesday 26 October 2016

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி!

ற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ Death Valley National Park Inyo County, California

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும்.


Friday 21 October 2016

பெர்முடா மர்மம் விலகியது : கடல் மட்டத்தில் 170 கிலோமீட்டர் காற்றை உருவாக்கும் அருங்கோண மேகங்கள்.

பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா பகுதி உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை பல கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன. சுமார் 5 50 லட்சம் கிலோமீட்டர் சதுரடி பரப்பளவு கொண்டது ஆகும்.



Thursday 20 October 2016

உபயோகமான சில டிப்ஸ்கள்.

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.


Tuesday 18 October 2016

நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்.

லகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.


Sunday 16 October 2016

விஞ்ஞானத்தின் வரலாறு.

ண்பர்களே இந்த பதிவு சற்று நீளம் தான் சிரமம் கருதாமல் வாசித்தால் நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும்.

Wednesday 12 October 2016

மரண விளிம்பில் 9 அனுபவங்கள் ரேமண்ட் மூடி ஆராய்ச்சி முடிவு.

ழ்மனதின் அற்புத சக்திகள்

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்

ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.


Saturday 8 October 2016

ரஷ்யாவின் ராயல் பெல் ! பற்றிய சுவாரசிய தகவல்கள்.

ணிகள் மனிதன் ஆரம்ப காலங்களில் கண்டுபிடித்த
தொண்மையான இசைக்கருவி. இந்தியாவின் பெரும்பாண்மையான மதங்களில் மணிகள் 
உபயோகித்தமைக்காண ஆதாரம் உண்டு.

Wednesday 5 October 2016

Black Hole - ஒளியும் தப்பாது !

ந்த அண்ட சராசரத்தில் இருக்கும் மிக ஆச்சரியத்தக்க விசயங்களில் ஒன்று 'Black Hole'. இந்த அண்டமானது 13.8 பில்லியன்
ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பிலிருந்து (Big Bang theory) உண்டானதாக கருதப்படுகிறது.

Monday 3 October 2016

ரஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் 40 ஆண்டுகளாக எரியும் சுரங்கம்

ஷ்ய விஞ்ஞானிகளின் தவறால் மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் உள்ள காராகும் பாலைவனப் பகுதியில் தோண்டப்பட்ட எரிவாயு சுரங்கம் 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.

Friday 30 September 2016

உலகின் தீரா மர்மங்கள்... உலகில் பல இடங்களில் உள்ள பிரமிட் பற்றிய அறிய தகவல்கள்....

ர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.

Monday 26 September 2016

மனிதன் தன் சுயநலத்திற்காக முற்றிலும் அழித்த அதிசயப் பறவை இனம்.

பிரிட்டனில் ஏறத்தாழ முழுவதுமாக நிறைவுபெற்ற டூடூ பறவையின் எலும்புக் கூடு, நவம்பர் மாதம் ஏலத்திற்கு வருகிறது.

ஒரு தனிப் பறவையின் எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டூடூ எலும்புக்கூடு உலகிலேயே ஒன்றுதான் உள்ளது; அது மொரிஷியஸில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு வரும் முதல் டூடூ எலும்புக்கூடு இதுவாகும்; பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த எலும்புக்கூடு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

Tuesday 20 September 2016

முடியாததென்ற ஒன்று இல்லை! - ஊக்கம் தரும் ஓர் உண்மை வரலாறு!

பெயர் கரோலி டக்கா(க்)ஸ். Karoly Takacs.

புடாபெஸ்டில் பிறந்தவர். ஹங்கேரி ராணுவத்தில் சார்ஜெண்டாக பணியாற்றிவந்தார்.

Wednesday 14 September 2016

விண்வெளியில் விண்வெளி வீரர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?

ர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.


Wednesday 7 September 2016

கொஞ்சம் வினோதம், கொஞ்சம் விசித்திரம்!... அதுவும் இந்தியாவில் வாங்க பாக்கலாம்!...

ந்தியாவில் விசித்திரம் அல்லது வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு விசித்திரமான நாடு தான்.

தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? தாஜ் மஹாலை கட்டியது யார்? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனையோ தொக்கி நிற்கின்றன. அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகள் தற்கொலை செய்யும் இடம், வீடுகளுக்கு கதவுகளே இல்லாத கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.


Tuesday 30 August 2016

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!

பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த விசயத்திலும் ஒத்து போவதே கிடையாது பெண் ஒன்று சொன்னால் ஆண் ஒன்று சொல்வது இறுதியில் அது மிகப்பெரிய சண்டையில் சென்று முடியும். இதை பலவீடுகளில் பார்க்கலாம் இதற்க்கு ஆண் பெண் மூளையே காரணம். இந்த இருவரின் மூளை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்ப்போம்.




Saturday 27 August 2016

உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிதர்கள் பற்றித் தெரியுமா?..

பொதுவாக மனிதர்களுக்கு மர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆவல் இருக்கும். அதற்காக நாம் சில தேடல்கள் கூட மேற்கொள்வோம். இப்போது நாம் உலகில் உள்ள சில மர்மம் நிறைந்த மனிர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

Thursday 25 August 2016

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர்.

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர்
தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய
வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது.


Monday 22 August 2016

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

கிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர் (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

Egyptology

Saturday 20 August 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களின் விலை தெரியுமா?

லிம்பிக் பாட்மின்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற சிந்துவுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் அவர் பெற்ற பதக்க மதிப்பு குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் பதக்கங்களின் விலை மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகம் அதன் மதிப்பு விவரம் வருமாறு:

Thursday 18 August 2016

ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய ஒரு முழுமையான வரலாறு.........

லிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது.

ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. ஜியஸ் கடவுளின் மகனான ஹெர்குலிஸ் தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு சுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.

zeus

Tuesday 16 August 2016

FBIக்கே தண்ணி காட்டியவன் இப்போது ஒரு ஹீரோவாக மதிக்கப்படுகிறான்.

த்னாகர் ஒரு கொள்ளைக்காரன். அவன் நாரதரிடமே கொள்ளையடிக்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டான். ‘‘இந்தப் பாவத்தில் பங்கெடுக்க உன் குடும்பத்தினருக்கு சம்மதமா?’’ என்று கேட்டார் நாரதர். ரத்னாகர் குடும்பத்தில் கேட்க, அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அன்று மனம் திருந்திய ரத்னாகர், நாரதர் சொல்லித் தந்த மந்திரத்தை ஜெபித்து தவம் இருந்தான். உடல் மறையும் அளவுக்கு எறும்பு கோபுரமாக புற்று கட்டியது. வரம் கிடைத்தது. அவர்தான் இராமாயணத்தை எழுதிய வால்மீகி. (சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்றால் எறும்புப் புற்று என்று ஒரு பொருள்)

இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு ரத்னாகர்தான் ஃபிராங்க் அபாக்னேல். ஒரு சமயம் அமெரிக்கா, சுவீடன், ஃபிரான்ஸ் என்று 12 நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவன். அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-க்குப் பெரிய சவாலாக இருந்த இவன், இப்போது அதே துறையால் ஒரு ஹீரோவாக மதிக்கப்படுபவன்.

Tuesday 9 August 2016

கொலைக் குற்றவாளிக்கு பூ மாலை! நானாவதி கொலை வழக்கு.

ருவன் ஒரு கொலை செய்கிறான். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அவன் வரும்போது அவன் மீது பூக்கள் அள்ளி வீசுகிறார்கள். பல இளம்பெண்கள் அவனை திருமணம் செய்ய தயார் என்கிறார்கள். என்ன, கற்பனையான சினிமா காட்சிகள் போல இருக்கிறதா? இவை அத்தனையும் நிஜத்தில் நடந்தவை! அதுவும் இந்தியாவில்.

ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?


Friday 5 August 2016

அழகியின் அழகற்ற மரணம்! மர்லின் மன்றோ பற்றி தெரியாத தகவல்கள்.....

1950 ஆம் ஆண்டு மர்லின் மன்றோ நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படத்தின் கால் மணி நேர காட்சியொன்று சமீபத்தில் 1.5 மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. மர்லின் முகம் தெரியாத ஏதோ நடிகர் ஒருவருடன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி அது. FBI-ன் பராமரிப்பில் இருந்த அந்த கால் மணி நேர படத்தை, அதிக விலைகொடுத்து வாங்கிய செல்வந்தர் தன்னை மீடியாவில் வெளிப்படுத்த விரும்பவில்லை. விற்பனை ரகசியமாக நடந்தது.

மர்லின் இறந்து போய் 54 ஆண்டுகளுக்கு பின்னும் அவள் பல்லாயிரம் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள். அவளது பாதிப்பு உலகம் முழுவதும் நீக்கமற்று நிரம்பியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்த நிகழ்ச்சி.

Monday 1 August 2016

விமானக் கடத்தலில் விசித்திரம்! அமெரிக்காவையே அலறவிட்டவன்...

எஃ ப்பி ஐ எனப்படும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( The Federal Bureau of Investigation - FBI) உலகின் முன்னணி துப்பறியும் நிறுவனங்களுள் ஒன்று. குற்றங்களைத் தடுக்கும், குற்றவாளிகளை விரட்டிப் பிடிக்கும் 'அமெரிக்கக் கழுகு'. ஆனால் இந்த பிரம்மாண்ட ஜாம்பவானின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டிய 'தனி ஒருவன்' இருக்கிறான். அதுவும் சும்மா இல்லை. 45 ஆண்டுகளாக. பெயர் - டி.பி. கூப்பர்.


Thursday 28 July 2016

சூரிய நடுக்கம்....

பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள
நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன்
தாக்கம் மேலே நில நடுக்கமாக வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட இதே போல சூரியனின் உள்ளும் நிகழ்கிறது.


Tuesday 26 July 2016

இன்று கார்கில் தினம். நாம் வாழ தம் இன்யுரையும் நீத்த நமது வீரர்களின் தினம்.

கார்கில் போர் 1999ல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

Friday 22 July 2016

உலகமும் சுதந்திர நாடுகளும்! – அறிய வேண்டிய தகவல்கள்.

லக நாடுகள் எத்தனை?

லகத்தில் இன்றைய தேதியில் 196 நாடுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (எனினும் தாய்வான் ஒரு தனி நாடாக பல அனைத்து உலக நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட்ட நாடுகள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த போதும் “வீட்டோ” அதிகாரமுள்ள சீனா, தாய்வான் தனது நாட்டின் ஒரு மாகாணம் என உத்தியோக பூர்வமாக அறிவிப்பைக்கொண்டுள்ளது.)


Wednesday 20 July 2016

"லெமூரியா கண்டமும் குமரிக்கண்டமும்" சில அரிய தகவல்கள்.

குமரி கண்டம் என்றவுடன் நம் தமிழ்நாடு தான் என்று நினைத்து விட வேண்டாம். இங்கிருந்து சரியாக 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தமிழ்நாடு எவ்வளவு பெரியது தெரியுமா? அங்குதான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலதீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் இப்பொழுது இருக்கும் ஆப்ரிக்கா போல கட்சி அளித்த மாபெரும் தீபகற்ப நாடு நம் தமிழ்நாடு. அவை அனைத்தும் இயற்கை கடல் சீற்றத்தினால் அழிந்து போயிற்ரு.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.


Monday 18 July 2016

50% இறப்பிற்கு காரணமான கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்!

லகத்திலேயே மிக ஆபத்தான பூச்சி எது? என்று பார்த்தால்… நாம் நினைப்பது போன்று அமேசான் காடுகளிலோ அல்லது ஆப்பிரிக்க காடுகளிலோ இருக்கும் ஒரு இனம் தெரியாத ஜந்து அல்ல…
நம்மை சுற்றி இருக்கும் நாம் அறிந்த ” நுளம்பு/கொசு” தான்.

Friday 15 July 2016

நமக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணு ஆயுதம் பிரம்மாஸ்திரமா?

ஜூலை 16, 1945 ஆம் ஆண்டு (சரியாக நாளையுடன் 71 ஆண்டுகள் ) நியூ மெக்சிகோ பகுதியின் வைட் சாண்ட்ஸ் ப்ரூவிங் கிரவுண்ட் எனும் இடத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் சோதனை செய்யப்படுகின்றது. இந்தச் சோதனை நிச்சயம் தோல்வியை தழுவும் என் சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் இந்த ஆயுதமானது நியூ மெக்சிகோ நகரையே அழிக்கப் போகின்றது என நினைத்தனர்.


Wednesday 13 July 2016

கருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்!:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்!

மது பிரபஞ்சத்திலுள்ள பல கூறுகள் இன்றும் பூரணமாக விளக்கப்படுத்தப்படாது மனிதனை வியப்பில் ஆழ்த்துபவையாகவே இருந்து வருகின்றன.


Monday 11 July 2016

பிள்ளைகள் பிணமாக தொங்கும் பேய் தீவு – உண்மைச் சம்பவம்

மெக்சிகோ நகரிலிருந்து 2 மணி நேரம் ஒரு கால்வாய் வழியாக பயணித்தால், ‘சோச்சி மில்கோ’ என்ற மனித நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியை அடையலாம்.

Friday 8 July 2016

டாஸ்மேனியா இன அழிப்பு! பிரிட்டனின் கோர தாண்டவம்...

ஸ்த்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அழகிய தீவு. நாய்கள் அற்ற தீவு…. அங்கு 5000 இக்கும் மேற்பட்ட டாஸ்மேனியர்கள்
என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.


Wednesday 6 July 2016

தீர்வில்லாத கடல் இரகசியங்கள்..!

கிட்டத்தட்ட பூமியின் 71% மேற்பரப்பை சமுத்திரங்கள் தான் ஆள்கின்றன. சாதரணமாகவே தன்னுள் பல வகையான மர்மங்களையும் விசித்திரங்களையும் கொண்டுள்ள கடலின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்நாள்வரையிலாக யாரும் சென்றதே இல்லை, செல்வதற்கு முயலவும் இல்லை. அப்படியாக, சமுத்திரம் மேன்மேலும் பற்பல இரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்..!

Monday 4 July 2016

இன்றும் தொடரும் மர்மம் : பேய் இருக்கா இல்லையா.!?

பேய் இருப்பதும், இல்லாததும் ஒருவரின் நினைப்பை பொறுத்தது ஆகும். அதிநவீன தொழில்நுட்ப யுகத்திலும் பேய் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான பதில் யாராலும் கூற முடியவில்லை. எந்தக் கருவியும் இதனை நிரூபிக்கவும் இல்லை.


இத்தகை சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் உள்ளது என்றும் இதனை விளக்கும் சில தகவல்கள்.

Sunday 3 July 2016

மின்னாற்றலுக்குரிய காற்று : "கனவில் கூட நினைத்ததில்லை" விஞ்ஞானிகள் அதிர்ச்சி..!

ருவம், சூழ்நிலை, நீர் ஆதாரம் என கிட்டத்தட்ட பூமி போன்றே இருக்கும் கிரகங்களை 'எர்த்-லைக் பிளான்ட்' (Earth-like) எனப்படும். அப்படியான கிரகங்கள் விண்வெளியில், பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி அருகாமையில் இருந்தாலும் சரி அதற்கொரு இயற்கையான அழிவு ஏற்படுகிறது என்றால் அதே போன்றதொரு அழிவு நாம் வாழும் பூமி கிரகத்திற்கும் சாத்தியமான ஒரு அழிவு தான்..!


அப்படியான ஒரு அழிவு அதுவும் விஞ்ஞானிகள் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒரு அழிவு அரங்கேறியுள்ளது..!

Friday 1 July 2016

வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடத்தில் ஜொலிப்பது என்ன?

மெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.



Thursday 30 June 2016

கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்.

யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

Wednesday 29 June 2016

அறிவியல் அறிவோம்; கரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்?

நிலத்துக்கு அடியில் பல மீட்டர் நீளம் சுரங்கங்கள், நிலவறைகளைக் கட்டி வாழும் கரையான்கள் மின்விசிறி, குளிர்சாதனம் இல்லாமல், தமது புற்றினை காற்றோட்டமாக வைத்துகொள்வது எப்படி? சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்களில் பாதாள ரயில் திட்டம் உள்ளது. பூமிக்கு அடியில் பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையில் ரயில் போகும். பூமிக்கு அடியில் பல லட்சம் மக்கள் போய்வருவதால் அங்குள்ள காற்றில் ஆக்ஸிஜன் குறையும். கார்பன்டை ஆக்ஸ்சைடு சற்றே உயரும். நெரிசல் காரணமாக ஈரப்பதம் கூடி புழுக்கமும் துர்நாற்றமும் ஏற்படும். இதனை சமாளிக்கத்தான் மெட்ரோ ரயில்கள் குளிர்பதனம் செய்யப்படுகின்றன.

Monday 27 June 2016

நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் “6விஞ்ஞான பொய்கள்”!

6. வாத்தின் “குவாக்” சத்தம் எதிரொலிக்காது! பாடசாலைகளில் எதிரொலி பற்றி கற்பிக்கப்படும் போது வாத்து எழுப்பும் “குவாக்” ஒலி விதிவிலக்காக
எதிரொலிக்காது என கற்பிக்கப்பட்டது. எனினும் அது தவறு என தற்போதைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உண்மையில் “குவாக்” ஒலி எதிரொலிக்கிறது, எனினும் நமது செவிப்பறையும் (அதனுடன் இணைந்த மூளை நரம்புகளும்) அந்த ஒலியின் மீடிறனிற்கு (frequencies) எதிர்வினையை காட்டுவதில்லை! அதனாலேயே வாத்தின் “குவாக்” ஒலி நமது காதுகளுக்கு எதிரொலிக்காததுபோன்று தோன்றுகிறது.
“குவாக்” ஒலிக்கு எதிரொலிப்பு உண்டு என்பது, விசேடமாக தயாரிக்கப்பட்ட எதிரொலி அறை மூலம் நிரூபிக்கப்பட்டது.


Friday 24 June 2016

பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடக்கம் உயிர் தோற்றம் வரை சுருக்கம் பூமியின் வரலாறு.

நாம் வாழும் பூமி உருவானது சோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான்.
இந்த சோலார் நெபுலா என்பது சூப்பர் நொவா என்னும் முதல்
பெரு வெடிப்பில் இருந்து வந்தது. சற்று விரிவாக பார்த்தால், சூப்பர்
நொவா தான் இந்த யூனிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.

Wednesday 22 June 2016

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா.

புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.