என்னுடைய பேஸ்புக் பேஜ் லிங்க்

Friday 24 June 2016

பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடக்கம் உயிர் தோற்றம் வரை சுருக்கம் பூமியின் வரலாறு.

நாம் வாழும் பூமி உருவானது சோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான்.
இந்த சோலார் நெபுலா என்பது சூப்பர் நொவா என்னும் முதல்
பெரு வெடிப்பில் இருந்து வந்தது. சற்று விரிவாக பார்த்தால், சூப்பர்
நொவா தான் இந்த யூனிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.

சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூப்பர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது. அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் சோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட்ரஜன் நிரம்பிய நெருப்பு பந்து. இன்றிலிருந்து சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சோலார் நெபுலா வெடித்து சிதறியதால் உருவானது தான் இந்த சூரிய மண்டலம். 


சோலார் நெபுலாவின் மையப்பகுதி சூரியன் ஆனது. அதன் சிதறல்கள் மற்ற கோள்காளாகவும், அதிலிருந்து துணை கோள்களும் உருவாயின. இந்த கோள்களின் ஒன்று தான் நம் பூமி. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். பூமி அதன் தாய் ஆன சூரியனை சுமார் மணிக்கு 100,000 கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்புவிசை என்பது நமக்கு தெரியும். இந்த ஓயாத சுழற்சியினால் தான் பூமி உட்பட அனைத்து கோள்களும் கோள வடிவம் பெற்றன.


பூமியின் மேற்பரப்பு குளிர தொடங்கியது. ஆனால் உட்பகுதியில் இருந்த வெப்ப அழுத்தத்தின் காரணமாக எரிமலைகள் வெடித்து கார்பன்டை ஆக்ஸைட், நீராவி பெருமளவில் வெளியேறின. இதனுடன்
சிறிதளவு, மீதேன் மற்றும் அமோனியாவும் வெளியேறின. ஆரம்ப காலத்தில் பூமியில் ஆக்சிஜன் இல்லை. இவ்வாறு வெளியேறிய நீராவி காலப்போக்கில்
குளிர்ந்து நிராக மாறி பூமியின் ஆரம்ப கடல் தோன்றியது. பூமியிலிருந்து நீராவி வெளியேறுவது இன்றும் சில இடங்களில் நிகழ்கிறது. 


கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கனிமங்கள் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர்வெப்பமாகவும், கனிம சத்துகள்
மிகுதியாக இருக்கும்.


இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறஊதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பாக்டீரியா தோன்றியது.

cyanobacteria
இந்த சயனோ பாக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ கார்பன்டை ஆக்ஸைட், நீர், சூரிய ஒளி போதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோ பாக்டீரியா முதல் உயிரியாக இந்த உலகில் உருவானது.


இது பல்கி பெருக தொடகியது. அப்பொது நம் பூமிக்கு சுமார் 700 மில்லியன்
ஆண்டுகள். இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோ பாக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின.
அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தாவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த கார்பன்டை ஆக்ஸைட்,
மழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின.


இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட்யை
கிரகித்து  ஆக்ஸிஜனை வெளியிட்டன. இதனால் கார்பன்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி கார்பன்டை ஆக்ஸைட் படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன.


இவ்வாறாக கார்பன்டை ஆக்ஸைட் அளவு குறைந்து போனது. ஆக்சிஜன்
அளவு அதிகரித்தது. இந்த ஆக்சிஜன் UV கதிர்கள் எனும் புறஊதா கதிர்களால்
தாக்கப்பட்டு O3 எனும் ஓசோன் மண்டலம் உருவானது. இந்த ஓசோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதிர்களிடம் இருந்து காப்பாற்றி பூமியில்
மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவை பட்டன.


இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளாமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மாற்றியது.

No comments:

Post a Comment